கடலூர், ஆக. 2- கடலூர் மாவட்ட மீனவ கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோத லில் ஒருவர் கொலை செய் யப்பட்ட நிலையில், வீடுகள் மற்றும் படகுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிரா மத்தில் குண்டு உப்பலவாடி பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாசிலாமணி தரப்பின ருக்கும், தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவ ரான சாந்தியின் கணவர் மதியழகன் தரப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்த லில் மாசிலாமணியின் மனைவி பிரவீனாவும், மதிய ழகனின் மனைவி சாந்தியும் போட்டியிட்டனர். இதில் சாந்தி வெற்றிபெற்றுவிட, பிர வீனா தோல்வியடைந்தார். அதிலிருந்து இரு தரப்பின ருக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வந்தது. இந்நிலையில்தான் சனிக்கிழமை இரவு மாசி லாமணியின் தம்பி மதிவா ணன் (36) என்பவர் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மதிவாணன் தரப்பினர் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட படகுகள், பல லட்ச ரூபாய் மதிப்பிப்பிலான மீன்பிடி வலைகளை தீ வைத்து எரித்தனர்.
தொடர்ந்து இரு தரப்பின ருக்குமிடையே மோதல் அதி கரித்த நிலையில், அப்பகுதி யில் இருந்த வீடுகள் சூறை யாடப்பட்டு, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் போர்க் களம் போல் காட்சி யளித்தன. காவல் கண்காணிப்பா ளர் அபிநவ், துணை கண் காணிப்பாளர் சாந்தி தலை மையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். இதுதொடர்பாக கட லூர் தேவனம்பட்டினம் காவல்நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டு கொலை மற்றும் கலவரம் தொடர்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோரை சந்தேகத் தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். கொலை செய்யப்பட்ட மதிவாணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு காவல் துறையி னர் அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தில் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கல வரத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதி முழுவதும் பதட்ட மான சூழ்நிலை உருவாகி உள்ளது. சம்பவத்தில் தொடர்பு டைய மாசிலாமணி மற்றும் மதியழகன் இரு தரப்பின ருக்கும் பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன்புகூட மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பின ரைச் சேர்ந்த 30 பேர் மீது 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.