சிதம்பரம், மே 30- சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சேகரிக்கப்படும் குப்பைகளை சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமகுளம் என்ற இடத்தில் கொட்டி வருகிறார்கள். இந்தப் பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருவதால் மிகப்பெரிய குப்பைக் கிடங்காக உருவாகியுள்ளது. மேலும் குப்பைகளை தரம் பிரிக்கா மல், தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் அருகில் வசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. வாகன ஓட்டி களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நக ராட்சி அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் மற்றும் அப் பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஊராட்சித் தலைவர் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் ஓமக்குளம் பகுதிக்கு குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் இனி மேல் குப்பைகளை தரம் பிரித்து எடுத்து வருவதாகவும், குப்பைகளை மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுப்பதாக வும், தீ வைத்து கொளுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.