கடலூர், ஆக.19- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள மணவாளநல்லூரில் உள்ள திருகொளஞ்சியப்பர் கோயில் வளாகத்தில் ஊழியர்கள் 2 பேர் ஒழுங்கீனமாக நடந்துக் கொள்ளும் வீடியோ பதிவு அண்மையில் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து கோவில் புரவலர் கா.சிவ ராஜ், நந்தவன பராமரிப்பாளர் ரெ.சிவகுமார் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அந்த வீடியோ பதிவில் மான்கறி சாப்பிடுவது தொடர்பான உரை யாடல் பதிவாகியிருந்தது. இதையடுத்து சிவராஜ், சிவகுமார் ஆகி யோரிடம் இதுகுறித்து விருத்தாசலம் சரக வனச்சரகர் ரவி விசாரணை நடத்தினார். முன்னதாக கோயிலுக்குச் சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மான்களை பார்வையிட்டார். இதில், கோயிலில் 15 மான்கள் வளர்க் கப்பட்டதும், தற்போதும் அந்த மான்களின் எண்ணிக்கை சரியாக இருப்பதும் தெரிய வந்தது. எனவே, மான்கறி எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு வீடியோ வெளியீடு
இதற்கிடையில் கோயில் ஊழியர்களில் இரு கோஷ்டியினர் செயல்படுவதும், அவர்களில் மற்றொரு தரப்பினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வீடியோ வெளியிட்ட தரப்பின ருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மற்றொரு தரப்பினர் வெளியிட்ட வீடியோ பதிவும் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பாக பரவிவருகிறது.