ஊழியர் விரோத போக்கை கையாளும் அலுவலக மேலாளர் பொது என்.பாலச்சந்திரனை உடனடியாக மாறுதல் செய்து வேறு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மு.ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் எஸ்.பார்த்திபன், மாநிலச் செயலாளர்கள் எல்.பிரேமச்சந்திரன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் எல்.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினர்.
*******************
சிதம்பரம் அருகேயுள்ள சி. முட்லூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்க ளுக்கு கல்லூரி நேரங்களில் பேதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளைச் செய லாளர் அவினேஷ் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக சிதம்பரம் கிளை மேலாளர்,சிதம்பரம் போக்குவரத்து வட்டார அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.