ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலையில் 7 மணியளவில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது. கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால், எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடுமையான பனிமூட்டம் காரணமாக சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.