களியக்காவிளை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரளஎல்லைபகுதியில் 38 சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சோதனை சாவடிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கூடாரத்தில் செயல்பட்டுவந்தன. இந்நிலையில் பிப்ரவரிமாதம் களியக்காவிளை சோதனைசாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் வில்சன், தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மாநில எல்லைப்பகுதியில் உள்ளசோதனை சாவடிகளை நவீனபடுத்தும் வகையில்பணிகள் நடைபெற்றுவந்தன.
திருவனந்தபுரம்நாகர்கோவில்தேசியநெடுஞ்சாலைகளியக்காவிளை,நெட்டா,சூழால் போன்ற பகுதிகளில்அனைத்துவாகனங்கள் தூரத்தில் இருந்துவரும்போதே பதிவுஎண் தெரியும்வைகையில் நவீன கேமிராக்களுடன் கட்டுபாட்டுஅறை , ஓய்வறை, கழிவறையுடன் கூடிய சோதனைசாவடிகள் அமைக்கபட்டது.இந் தசோதனைசாவடிகளை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்திரிநாத்நாராயணன் செவ்வாயன்றுதிறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தக்கலை சரக டிஎஸ்பிராமசந்திரன்,மார்த்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் , களியக்காவிளை உதவி ஆய்வாளர்கார்த்திகேயன் உட்பட பலகாவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர் பத்திரிநாத்,மாவட்டஎல்லைவழியாக நடைபெற்றுவரும் கஞ்சா ,ரேஷன்அரிசி ,கனிமவளங்கள்மற்றும்பல்வேறுகடத்தல்களைதடுக்கும்வகையில் இந்த நவீனவசதிகளுடன் கூடிய சோதனைசாவடிகள் உதவியாக இருக்கும் என்றும் இதன்மூலம் கடத்தலை தடுப்பதுடன் குற்றசம்பங்கள் குறையும்என்றுநம்பிக்கை தெரிவித்தார்.மேலும் படிப்படியாக எல்லைப்பகுதியில் உள்ளமற்ற அத்தனை சோதனைசாவடிகளும் நவீனபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மாவட்டத்தில் நிலவும் காவல்துறை தட்டுப்பாட்டை நீக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது வருவதாகவும் தெரிவித்தார்.இரவுரோந்துசெல்லும் அதிகாரிகளின் செல்போன் எண்களை பொதுமக்கள் தெரியும் வகையில் சமூகஊடகங்கள் மூலம் தெரியபடுத்தியதன் மூலம்கடந்த மாதத்தில் 40 புகார்கள் இரவுரோந்து அதிகாரிகளுக்கு நேரடியாக தெரிந்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.