tamilnadu

img

கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஏழே நாட்களில் ஆக்ஸிஜன் ஆலை....

கொல்லம்:
கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன திரவ ஆக்ஸிஜன் ஆலையை  அரசு அமைத்துள்ளது. கோவிட் நோயாளிகள் மற்றும் பிறருக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த புதிய ஆலை அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார். அவசர தேவை கருதி இந்த ஆலை ஏழு நாட்களுக்குள் நிறுவப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்த ஆலை மருத்துவமனைக்கு தேவையான முழு ஆக்ஸிஜன் வழங்கலை உறுதி செய்யும். இந்த ஆலை 300 சிலிண்டர்களின் திறன் கொண்டது. இஎஸ்ஐ-யில் இருந்து மருத்துவக் கல்லூரியை அரசு கையகப்படுத்திய பிறகு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. புதிய அமைப்பு தற்போதுள்ளதை விட 25 சதவீதம் செலவை குறைக்க உதவும். இது 300 கேஎல்டி திரவ ஆக்ஸிஜனை சேமிக்கும் திறன் கொண்டது. இதன்மூலம் தேவையற்ற ஆக்ஸிஜன் இழப்பையும் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.