திருப்பூர், டிச. 21- திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை பகுதியில் காட்டுப் பன்றி களால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலி லிருந்து நீக்கவும், வன விலங்குகளிட மிருந்து மனித உயிர்களையும், விவசா யிகளின் பயிர்களையும் காக்க வேண் டும் என வலியுறுத்தி வனத்துறை அலு வலகம் முன்பு விவசாயிகள் குடும்பத் துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தி னர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பெ.சண் முகம் உள்ளிட்ட ஏராளமான விவசாயி கள் கலந்து கொண்டனர். இந்நிலை யில், மாவட்ட ஆட்சியர் விடுத்த அழைப்பின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், விவ சாயிகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைப்பதற்கான உத்தரவாதமளிக் கப்படும் என மாவட்ட ஆட்சியர் கேட் டுக் கொண்டார். இதனால் அன்று மாலை 6.30 மணிக்கு காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து டிச.18ஆம் தேதி மாவட்ட வன அலுவலர் அலுவ அலுவலகத்தில், உடுமலைக் கோட் டாட்சியர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவ சாயிகளின் பிரச்சனைகளுக்கு சுமூக மான தீர்வுகள் காண்பதென முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வெள்ளியன்று கொ.வல்லக்குண்டா புரத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், வன விலங்குகள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை தொடர்ந்து செயல் பட ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல் படுவதென முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் முதல் மாநில அரசு வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நேரில் சென்று வலியுறுத்தி நிரந்தர தீர்வு காண தொடர் நடவடிக்கை களை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக பொறுத்த மானவர்களையும் நேரில் சந்தித்து நம் கோரிக்கைகள் நிறைவேற ஆதரவு கேட்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாய சங்க அமைப்புகளின் நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டனர்.