சென்னை,நவ.26- குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் சுகாதார அதிகாரிகள் உள்பட 50 அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பலகோடிகள் ஊழல் நடந்து இருப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன் ஒன்றில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி டைரி ஒன்றை கைப்பற்றினர். அதில் குட்கா போதை பொருளை விற்பனை செய்வதற்காக யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, கலால்துறை அதிகாரிகளின் பெயர்களும் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல்துறை டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது. காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் யாரும் கைதாக வில்லை.
குட்கா ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி களும் தனியாக வழக்கு பதிவு செய்தனர். சி.பி.ஐ. விசாரணை முடிந்து குட்கா விவகாரம் ஓய்ந்து போயிருந்த நிலையில் அம லாக்கத்துறையினர் அதனை கையில் எடுத்துள்ளனர். வருகிற 2 மற்றும் 3 ஆம்தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசா ரணை நடத்த உள்ளனர். இது தொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றும் 2 ஐ.ஜி.க்களுக்கும், முன்னாள் காவல் ஆணையர் ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள் ளது. காவல்துறை அதிகாரிகளில் சுமார் 20 பேர் வரையி லும், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை, உணவு பாது காப்புத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகள் 30 பேர் வரையிலும் குட்கா ஊழலில் தொடர்பில் இருப்பதாக ஏற்க னவே தகவல் வெளியானது. இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரி கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் குட்கா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.