ஈரோடு, டிச. 7- சத்தியமங்கலம் பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்திற் குள்ளாகி உள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்கு கள் ஏராளமானவை உள்ளது. இந்த வனப்பகுதியின் வழியாக தமிழகம்- கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ் சாலை அமைந்துள்ளது. இச்சாலையை பகல் மற்றும் இரவு நேரங்களில் யானை கள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பண்ணாரி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத் தில் நடமாடி வருகிறது. இந்த யானை அவ்வப்பொழுது சாலையின் நடுவே நின்று கொண்டிருப்பதால் நெடுஞ்சா லையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இச்சூழலில், வெள்ளியன்று பண் ணாரி அம்மன் கோவில் அருகே வனப்ப குதியில் இருந்து ஒற்றை யானை வெளி யேறி வந்துள்ளது. இதன்பின் திம்பம் மலை அடிவாரத்தில் தேசிய நெடுஞ்சா லையில் உள்ள பாலத்தின் அருகில் சாலை யின் நடுவே நின்று கொண்டு இருந்த தால் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடக்க முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்து றையினர், யானையை வனத்திற்க்குள் விரட்டும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதன்பின் சிறிது நேரத்திற்கு பிறகு யானை வனப்பகுதிக்கு சென்றது.