districts

img

தரங்கம்பாடி உப்பனாறு பாலம் அருகே ஆபத்தான பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

மயிலாடுதுறை, டிச.6-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத் தான பள்ளங்களால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்து டன் சென்று வரும் நிலை நீடித்து வருகிறது.  பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டு மென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தரங்கம்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சா லையின் குறுக்கே செல்லும் உப்பனாற் றின் வழியாக ஆற்றுநீர்  வங்கக்கடலில்  கலக்கிறது. மேலும் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் சுற்றுப்பகுதியிலிருந்து வடியும்  நீரும், கடல்நீர் மேலெழும்பும் காலங்களி லும் இந்த ஆற்றின் வழியாக இப்பாலத்தில் நீர் உட்புகுகிறது. இதனால், பாலத்தையும், சாலையையும் இணைக்கக்கூடிய  கரைப் பகுதிகளில் அரிப்பு ஏற்படுவதோடு, சாலை யின் இரண்டு பக்கங்களிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை கடல் நீர் சூழ்ந்து தீவு  போல் காட்சியளிக்கிறது. தற்போது இந்த பாலத்தின் நான்கு பகுதி யிலும் கடல் நீர் சூழ்ந்து உடைப்பு ஏற்பட்டு ஆ பத்தான பள்ளம் மற்றும் விரிசல்கள் உள்ளன.  இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்ப வர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.  எனவே உடனடியாக இந்த பாலத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வை யிட்டு சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.