அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த போது, பல்வேறு டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.