தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும்மான திருமகன் (46) உயிரிழந்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன், வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இவருக்கு நேற்று முன் தினம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.