ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக்கில் வேலைவாய்ப்பு, ஊழல், அரசியல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். இந்நிலையில் மக்களின் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அரசுக்கு எதிரானபோராட்டங்களில் ஈடுபட்ட 10 பேர் உயரிழந்ததாக அந்நாட்டு தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய பாஸ்ராவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.