திருவண்ணாமலை, ஆக. 12- உழைக்க மனமிருந்தால் முதுமை தடை யாக இருக்காது என்பதற்கு உதாரணமாக திருச்சியை சேர்ந்த உசேன்பாபு என்ற 80 வயது முதியவர் மூங்கில் குச்சிகளில் கப்பல் உள்ளிட்ட பலவிதமான கலைப்பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் தொடங்குவதற்கு முன்பு திருச்சி யில் இருந்து திருவண்ணாமலைக்கு பொருட்களை விற்பனை செய்ய உசேன்பாபு வந்தார். அவர் கிரிவலப்பாதையில் தான் கொண்டுவந்த அழகிய கலைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். அதனை பலரும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றுள்ள னர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப் படாததால் உசேன் பாபு தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திருவண்ணா மலையிலேயே தங்கிவிட்டார்.
தனது தள்ளாத வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதியுடன் கலைப் பொருட்களைச் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வரும் உசேன் பாபு இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். மேலும் முதுமை வந்து விட்டால் எதுவும் செய்ய முடி யாது என்று கருதும் பலருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பாடமாகவும் அவரது வாழ்க்கை அமைந்துள்ளது. தற்போது கிரிவல பாதைக்கு பக்தர்கள் வருகை குறைந்து விட்டதால் கலைப் பொருட்களை விற்க முடியாமல் வரு மானத்திற்கு வழியின்றி அவதிப்படுகிறார். மாவட்ட நிர்வாகம் அவரை திருச்சிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.