tamilnadu

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி விபத்து - 6 பேர் படுகாயம்

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் தாக்கிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.