tamilnadu

img

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க இந்துஜா குழுமம் மற்றும் அடிக்ரோ ஏவியேஷன் ஆர்வம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க இந்துஜா குழுமம் மற்றும் அடிக்ரோ ஏவியேஷன் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நிதி நெருக்கடியால் தொடர்ந்து செயல்படமுடியாமல், கடந்த மாதம் 17-ஆம் தேதி தனது சேவையை முற்றிலும் நிறுத்தியது. இந்நிலையில் எஸ்பிஐ, அந்நிறுவனத்தின் கடன்களை மீட்கும் முயற்சியில் இறங்கியது. அதன் ஒரு பகுதியாக ஜெட் ஏர்வேஸின் பங்குகளை ஏல முறையில் விற்பனை செய்ய முடிவெடுத்தது. ஏலத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப் பட வேண்டிய கடைசி தேதியான மே 10-ஆம் தேதி அன்று எதியாட் நிறுவனம், மட்டுமே ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்க முன்வந்தது. ஆனால், முழு பங்குதாரராக இல்லாமல் பகுதி அளவு பங்குதாரராகவே இருக்க முடியும் என்று எதியாட் நிறுவனம் கூறியது. இதனால் ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனையில் தெளிவு இல்லாமல் இருந்தது.

கடந்த வாரம், ஜெட் ஏர்வேஸை மீட்கும் நடவடிக்கையில், இன்னும் ஒரு வாரத்தில் தெளிவு கிடைக்கும் என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து எதியாட்டும், எஸ்பிஐ வங்கியும், இந்துஜா குழுமத்தை அணுகியது. இந்நிலையில் இந்துஜா குழுமம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்குவதற்கான முயற்சியல் இறங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்த நிகழ்வாக அமைந்திருக்கிறது. இதற்கிடையில், லண்டனை சேர்ந்த அடிக்ரோ ஏவியேஷன் நிறுவனமும் பங்குகளாஇ வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.