ஜனவரி 8 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் குறித்த தெருமுனைப் பிரச்சாரம் அரியலூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் ஆர்.சிற்றம்பலம், மாவட்டத் தலைவர் எஸ்.என்.துரைராஜ். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், மெய்யப்பன், செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றியச் செயலாளர் துரைஅருணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.