states

img

காஷ்மீரை முதலாளிகளுக்கு பட்டா போடும் மோடி அரசு!

ஸ்ரீநகர், டிச.28- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர் பாக தனியார் முதலாளிகளுடன் கை யெழுத்தாகி இருக்கும் 39 ஒப்பந்தங் களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற் கான சிறப்பு உரிமைகள் ‘பிரிவு 370’ மற்றும் ‘35 ஏ’ ஆகியவற்றின் கீழ், அந்த மாநிலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடி யும் என்ற வரம்பு இருந்தது.  ஆனால், இந்த வரம்பு காரண மாக அங்கு தொழிற்சாலைகள் அமைக்க முடியவில்லை மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்த முடி யவில்லை என்று கூறிவந்த ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டையுமே நீக்கியது. காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை யும் பறித்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்க ளாக மாற்றியது.  நில வருவாய் சட்டத்தைத் திருத்தி, இனிமேல் ஜம்மு - காஷ்மீ ரில் யார் வேண்டுமானாலும் அனைத்து வகையான நிலங்களை யும் வாங்கிக் கொள்ளலாம் என்று தனியார் கார்ப்பரேட்டுகளின் கொள் ளைக்கான கதவைத் திறந்து விட்டது.

எனினும், “ஜம்மு - காஷ்மீர் பகுதி யில் கடந்த 2 ஆண்டுகளில் வெறும் 7 பேர் மட்டுமே வெளிமாநிலங்க ளைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி யிருந்தனர். இந்த நிலங்களும் ஜம்மு பகுதியில் மட்டுமே வாங்கப்பட்டி ருந்தன. இந்நிலையில்தான், கார் மற்றும் டூவீலர் நிறுவனங்கள் நடத்தும் மெகா விற்பனை திருவிழாக்களைப் போல, திங்களன்று ஒரே நாளில் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் நிலங்களை வாங்கவும், அந்த நிலங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள், ஹோட்டல் கள், வணிக வளாகங்கள் அமைத்துக் கொள்ளவும் ரூ. 18 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான 39 ஒப்பந்தங்க ளில் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் கையெழுத்திட்டுள்ளது.

 ஹிரானந்தனி குழுமம், ரௌனக் குரூப், சம்யக் குரூப், சிக்னேச்சர் குளோபல், என்பிசிசி மற்றும் ரஹேஜா டெவலப்பர்ஸ் ஆகியவை இந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.  “ஜம்மு -காஷ்மீரில் மிகப் பெரிய வரலாற்று மாற்றங்கள் நடைபெறு கின்றன. மேம்பாட்டுத் திட்டங்களுக் காக ஜம்மு -காஷ்மீரில் 6 ஆயிரம் ஏக்கா் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை மாற்றம் செய்வதற்கும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 39 ஒப்பந்தகளில் 20 ஒப்பந்தங்கள் குடியிருப்புகளை அமைக்கவும், 7 வணிக கட்டடங்களை அமைக்க வும், 4 ஹோட்டல் அமைக்கவும், 3 திரைப்படம் மற்றும் பொழுதுப் போக்கு கட்டடங்கள் அமைக்கவும், 3 உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தவும், 2 நிதித் திட்டங்க ளைச் செயல்படுத்தவும் மேற்கொள் ளப்பட்டுள்ளன” என்று ஜம்மு - காஷ் மீர் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெளிப்படையாகவே தங்க ளின் திட்டத்தை தெரிவித்துள்ளார். மேலும், ‘யூனியன் பிரதேசங்க ளுக்கான மனை வணிகச் சட்டமும் (RERA), மாதிரி குத்தகை சட்டமும் ஜம்மு - காஷ்மீரில் அமல்படுத்தப் பட்டு இருப்பதாகவும், நிலம் வாங் கும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் களுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்கவும், திட்டங்களுக்கு உட னடியாக அனுமதி அளிக்கும் ஒற்றைச் சாளர முறையை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றும் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, ஒட்டுமொத்த மாக ரூ. 44 ஆயிரம் கோடிக்கான முதலீட்டுத் திட்டங்களை ஜம்மு - காஷ்மீர் அரசு வைத்துள்ளது. இது விரைவில் ரூ. 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும். இதற்காக 2022 மே மாதம் 21-22 ஆகிய தேதிகளிலும் தற்போது நடத்தப்பட்டதைப் போன்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் எனவும் சின்ஹா தெரி வித்துள்ளார். இந்நிலையில், இவ்வாறு அரசு மேற்கொண்டுள்ள வேலை மூலம், ஜம்மு - காஷ்மீர் பிராந்தியத்தை கார்ப்பரேட்டுகளுக்கு ‘விற்பனை’ செய்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

“ஒன்றிய அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் இப்போது முன்னுக்கு வந்துவிட்டது. ஆட்சி யாளர்கள், லடாக்கில் நிலம் அளிப்ப தாகவும், வேலைகள் அளிப்பதாக வும், குடியிருப்பு சட்டங்களை உரு வாக்குவதாகவும், மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கு வதாகவும் கூறும் அதே சமயத்தில், ஜம்மு-காஷ்மீரில் நேரெதிராக நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு விற்கப்படும் என்று கூறியிருக்கிறது. முதலீட்டாளர்கள் காஷ்மீரில் வாங்கு வதற்கு முன் ஜம்முவில் நிலத்தை வாங்குவார்கள். ஜம்மு மக்கள் இவர்களிடம் மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தன் ட்விட்டர் பக் கத்தில் எச்சரித்திருக்கிறார். “ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டவிரோதமாக நீக்கப் பட்டது. இப்போது முஸ்லிம் மக்க ளின் பெரும்பான்மையை ஒழித்துக் கட்ட மிகவும் வெட்கங்கெட்ட முறை யில் எங்கள் வள ஆதாரங்களை சூறையாடி, விற்பதற்கு முன்வந்தி ருக்கிறது. இவற்றின் நோக்கம் எங் கள் அடையாளத்தையும், இப் பிராந்தியத்தில் நாங்கள் பெரும் பான்மையாக இருப்பதையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஒரே நோக்கம்தான்” என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி சாடியுள்ளார்.