states

img

வெறுப்புப் பிரச்சாரம், மத வன்முறைகளுக்கு கிரிமினல்களைப் பயன்படுத்தும் பாஜக!

ஸ்ரீநகர், ஜூலை 5- தங்களின் ஆட்சியதிகா ரத்தை நிலைநிறுத்துவதற்காக நாட்டில் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், மத வன்முறை களை நடத்தவும் தன்னிடமுள்ள கிரிமினல்களை பாஜக பயன்படுத்துவதாக மெக பூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெக பூபா முப்தி இதுதொடர்பாக மேலும்  கூறியிருப்பதாவது: சமூகத்தில் குழப்பத்தை பரப்பவும், இந்து - முஸ்லிம் பதற்  றத்தை உருவாக்கவும் பாஜக விரும்புகிறது. இதற்காக, பாஜக குற்றவாளிகளுக்கு ஆதரவை யும், நிதியையும் அளித்து அவர்  களைத் தங்களின் நலனுக்காக வும், பிரச்சாரத்திற்காகவும் பயன்  படுத்துகிறது.  கன்னையா லால் (ராஜஸ் தான் மாநிலம் உதய்பூர்) கொல்லப்  பட்ட போது, இந்துக்களும் முஸ் லிம்களும் ஒருவரையொருவர் எதிர்த்துச் சண்டையிட்டனர்.

இத னால் யாருக்கு லாபம்?  முதலில் உதய்பூர் கொலைக்  காரன் மற்றும் இப்போது ரஜோரி யில் பிடிபட்ட ‘லஷ்கர்-இ-தொய்பா’ பயங்கரவாதி இருவரும் பாஜக-வுடன் தீவிர தொடர்புகளை கொண்டுள்ளனர். பசுக் காவலர்  களாக இருந்தாலும் சரி, பயங்கர வாதிகளாக இருந்தாலும் சரி, தங்கள் வகுப்புவாத பிளவு மற்  றும் வெறுப்பு நோக்கத்தை நிலை நிறுத்த ஆளும் கட்சி (பாஜக)  கிரிமினல்களைப் பயன்படுத்து கிறது.  இந்த குற்றவாளிகளில் யாரா வது எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடையவர்களாக இருந் தால் என்ன ஆகியிருக்கும் என்று  கற்பனை செய்து பாருங்கள். எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்த முடிவற்ற ‘பிரைம் டைம்’ இடத்தை மீடியாக்கள் ஒதுக்கியிருக்கும். ஆனால், இப்போது பல  எப்ஐஆர்-கள் பதிவு செய்யப் பட்டும், உண்மைகளை மழுங்க டிக்கும் வேலைகளை மீடியாக் கள் செய்து வருகின்றன.  இதேபோல புல்வாமா தாக்கு தல் வழக்கில் டேவிந்தர் சிங் எப்படி விடுவிக்கப்பட்டார். தாக்கு தல் எப்படி நடந்தது? இதனால் பயனடைந்தது யார்? என்பது குறித்து கேள்விகளும் எழுகின்றன. இவ்வாறு மெகபூபா முப்தி பேசியுள்ளார்.

;