states

img

கொரோனாவின்போது உடல்களை கங்கையில் வீசியது உண்மைதான்!

லக்னோ, டிச.25- கொரோனா பெருந்தொற்றின் இரண்டா வது அலையின்போது, “இறந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்பட்டது உண்மைதான்” என தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் தலைமை இயக்கு நர் ராஜ்வி ரஞ்சன் மிஸ்ரா தெரிவித் துள்ளார். தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிவர் ராஜ்வி ரஞ்சன் மிஸ்ரா. ‘நமாமி கங்கா’ திட்டத்தின் தலைவராக வும் தற்போது உள்ளார். இந்நிலையில், “கங்கை: மறு உருவாக்கம், புத்துணர்ச்சி, மீண்டும் இணைத்தல்” (Ganga: Reimagining, Rejuvenating, Reconnecting) என்ற தலைப்பில், தான் எழுதியிருக்கும் புத்தகத்தை கடந்த வியாழக்கிழமையன்று வெளியிட்டார். அதில், கொரோனா தொற்றுக் காலத் தில் கங்கை நதி சந்தித்த பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.

குறிப் பாக, ‘மிதக்கும் சடலங்கள்: அசுத்தமான நதி’ (‘Floating Corpses: A River Defiled’) என்ற அத்தியாயத்தில், “கொரோனா இரண்டாவது அலையின்போது கங்கை மற்றும் அதன் கரையை ஒட்டிய  மாநிலங்க ளில் உயிரிழப்புகள் அதிகரித்து காணப் பட்டன. ஒருகட்டத்தில், எரிமேடைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை மாவட்ட நிர்வாகத் தால் சந்திக்க முடியவில்லை. எனவே, கங்கை ஆற்றில் இறந்தவர்களின் உடல் வீசப்படுவது சிரமமில்லாததாக மாறியது” என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல் பாதி எரிந்த நிலையிலோ, அழுகிய சடலமா கவோ கங்கை ஆற்றில் வீசப்பட்ட தகவல் அறிந்து வேதனையடைந்தேன்.

கங்கையின் தூய்மைக்காக கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் அனைத்தையும்  இந்த சம்பவங்கள் பலவீனப்படுத்தின. தூய்மை கங்கை திட்டத்தின் தலைமை இயக்குநர் என்ற வகையில், கங்கை நதிக்கரையில் சடல மாக கிடக்கும் புகைப்படங்களை தொலைக் காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களி லும் பார்க்கும் போது வேதனை அடைந் தேன். பல்வேறு மாவட்ட தூய்மை கங்கை இயக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கபோதிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா மரணங்கள் அதிகமாக இருந்த தாலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உடல்களை ஆற்றில் வீசும் போக்கு அதி கம் காணப்பட்டதாகவும் ராஜ்வி ரஞ்சன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.