states

உத்தரப்பிரதேச சாலை விபத்து: 8 பேர் பலி; 20 பேர் காயம்

லக்னோ, ஜூலை 25-  உத்தரப் பிரதேச மாநிலம் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் திங்களன்று காலை ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். 20 பேர்  காயமடைந்தனர். இவர் களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியிலிருந்து 50 பயணி களுடன் ஒரு சொகுசு பேருந்து தில்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. நாராயண்பூர் என்ற கிராமத்தில் அதிகாலை பேருந்து நரேந்திராபூர் மத்ரா ஹா கிராமம் அருகே லோ னிக்திரா என்ற பகுதியில் வேகமாக வந்தது.  அப்போது, பீகாரில் இருந்து தில்லி நோக்கி சென்ற இரண்டடுக்கு கொண்ட பேருந்து பழுது காரணமாக சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் 50 பயணி களுடன் சென்ற சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து சாலை யோரம் நின்று கொண்டி ருந்த பேருந்து மீது மோதி யது. இந்த விபத்தில் சொகுசு பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படு காயம் அடைந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்தார். மேலும் 3  பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக  காவல்து றையினர் தெரிவித்தனர்.