states

img

மகா கும்ப மேளாவுக்கு ரூ. 2,500 கோடி; பசுப் பாதுகாப்புக்கு ரூ. 750 கோடி!

ஹரியானா அரசின் பட்ஜெட்டிலும் பசு பாதுகாப்புக்கு ரூ.400 கோடி 

ஹரியானா சட்டமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை  மாநில முதல்வரும் நிதியமைச்சருமான மனோகர் லால் கட்டார் தாக்கல் செய்துள்ளார். இதில், பசுப் பாது காப்பு அமைப்புக்கு ரூ. 400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பசுக்களின் பாதுகாப்பு திட்டமான ‘கவ் சேவா ஆயோக்’ அமைப்பு கட்டுப் பாட்டில், ஹரியானாவில் 632 கோசாலைகள் உள்ளன. இதில், 4 லட்சத்து 60 லட்சம் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த பட்ஜெட்டில் பசுப் பாதுகாப்புக்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது. இந்நிலையில், 2023-24 நிதியாண்டிற்கு அது 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

லக்னோ, பிப். 25 -  ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசு 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்துள்ளது. அதில், மகா கும்ப மேளாவுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 கோடியும், தெரு வோர கால்நடைகளின் பாதுகாப்பு க்கு ரூ. 750 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதிய மைச்சா் சுரேஷ் குமாா் கண்ணா, “12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும் மகா கும்ப மேளா நிகழ்வு 2025-ஆம் ஆண்டில் நடைபெறு கிறது. இந்த நிகழ்வின் முன்னேற் பாடு பணிகளுக்காக ரூ. 2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டிலும் ரூ. 621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது” என்று அறிவித்துள்ளார்.  மேலும், “அயோத்தி ராமா் கோயில் மூலம் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளது. இதற்காக 3 சாலைகளை அகலப் படுத்தி அழகுபடுத்தும் பணிகள் அடுத்த ஆண்டில் முடிவடையும். கடந்த 2022-இல் 24 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வருகைப் புரிந்துள்ளனா். இவர்க ளில் 4 லட்சம் போ் வெளிநாட்டு பயணிகள்” என்று கூறியிருக்கும் நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, போனால் போகிறதென்று, “பவுத் தத்தை மையமாகக் கொண்ட சுற்று லாவை மேம்படுத்தவும் ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைக ளைப் பராமரிக்கவும் ரூ. 750 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ள அம்மாநில பாஜக அரசு,  மாநிலம் முழுவதும் பசுப் பாதுகாப்பு மையங்களை நிறுவவும் ரூ. 120 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.