states

img

விஎச்பியின் எதிர்ப்பைப் புறந்தள்ளி ராகுலுக்கு சாமியார்கள் வாழ்த்து

லக்னோ, ஜன. 4 - காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாஜக அரசு முன்வைக்கும் வெறுப்பு மற்றும் பிளவுவாத அரசியலுக்கு எதிராக,  கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் ‘இந்திய ஒற்றுமை நடைபயணத்தை’ மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தில்லி ஆகிய 9 மாநிலங்களில் 108 நாட்களாக சுமார் 2500 கி.மீ. நடை பயணம் சென்ற ராகுல் காந்தி, 9 நாள் ஓய்விற்குப் பின், ஜனவரி 3 முதல் உ.பி. மாநி லத்தில் தனது நடைபயணத்தை துவங்கி யுள்ளார். முன்னதாக, ராகுலின் நடைபயணத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிர பலங்கள், மூத்த ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள்  ஆகியோரே வாழ்த்து தெரிவித்து வந்த நிலை யில், ராகுலின் உ.பி. மாநில நடை பயணத்திற்கு, எதிர்பாராத விதமாக ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸிடமிருந்து வாழ்த்து வந்தது.  

அந்த வாழ்த்தில், “நீங்கள் ஆரோக்கிய மாகவும் நீண்ட ஆயுளுடனும் இருப்பீர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்யும் பணி, சர்வஜன் ஹிதாயா, சர்வஜன் சுகாயா (அனைவருக்கும் நன்மை மற்றும் மகிழ்ச்சி) என்ற திசையில் உள்ளது… பிரபு ராம்  லல்லா கி கிருபா ஆப்கே உபர் பானி ரஹே  (பகவான் ராம் லல்லாவின் ஆசிகள் எப்போதும்  உங்களுக்கு இருக்கும்)” என்று ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்கூறியிருந்தார்.  ஆளும் பாஜக-வும், பிரதமர் மோடியும், 2024 தேர்தலுக்கு ராமர் கோயில் கட்டி யதையே தங்களின் சாதனையாக காட்டுவதற்கு திட்டமிட்டு வரும் நிலையில், அந்த ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகரே ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தது, பாஜக வட்டா ரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ராகுலுக்கு வாழ்த்து கூறியதற்கு எதிர்ப்பு  தெரிவித்தது. “ஒருவருக்கு ஆசீர்வாதம் வழங்குவது அவரது (சத்யேந்திர தாஸின்) தனிப்பட்ட முடிவு, ஆனால் உண்மை என்னவென்றால், ஆசீர்வாதங்கள் தெளிவான மனசாட்சியுடன், மனத்துடன், உண்மையாகவே சமூகத்தை ஒன்றிணைக்க உழைக்க விரும்புவோருக்கு மட்டுமே சென்று சேரும்” என்று விஎச்பி செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா எதிர்ப்பு தெரிவித்தார். சத்யேந்திர தாஸ் கடிதம் எழுதியிருக்கக் கூடாது என்றும் கூறினார்.

அப்போது, “நான் ஒரு அரசியல் நபர்  அல்ல, ஒரு சாமியார். யார் என்னிடம் வரம்கேட்க  வந்தாலும் அவர்களுக்கு நான் அதை கொடுப் பேன். ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு ஆசீர்வாதம் கேட்டு, அழைப்பிதழுடன் என்னைச் சந்தித்தார்கள். நானும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினேன்” என்று ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் பதிலளித்தார். இதனிடையே, ஆச்சார்யா சத்யேந்திர தாஸை தொடர்ந்து, ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய், மூத்த உறுப்பினர் சுவாமி கோவிந்த்தேவ் கிரி ஆகியோரும் ராகுலின் நடைபயணத்திற்கு வரவேற்பு தெரிவித்து, பாஜக, விஎச்பி கூட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர். “ஒரு இளைஞர் நாட்டிற்காக நடை பயணம் மேற்கொள்கிறார். நான் அவரது முயற்சியை பாராட்டுகிறேன். அதில் தவறு  ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

நான்  ஒரு ஆர்எஸ்எஸ் ஊழியன்தான். ஆர்எஸ்எஸ் ஒரு போதும் இந்திய ஒற்றுமை யாத்திரையைக் கண்டித்தது இல்லை. இந்த கடுமையான காலநிலையிலும் ராகுல் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். அதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். நாட்டில் அனைவரும் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் கூறுவேன்” என்று சம்பத் ராய் கூற, “ராகுலை ஆசீர்வதிக்க ராமரைப் பிரார்த்திக்கிறேன். தேசம் ஒற்று மையாகவும், வலிமையாகவும், இணக்க மாகவும் இருக்க வேண்டும். பாரத் ஜோடோ  ஒரு நல்ல முழக்கம், இந்தியா ஒன்றுபட வேண்டும்” என்று ராமர் கோயில் அறக்கட்ட ளையின் மற்றொரு மூத்த உறுப்பினரான சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் பாராட்டி யுள்ளார். இது சங்-பரிவாரங்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.