states

img

மாயாவதி மருமகனுக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவரும், உத்த ரப்பிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்தவருமான மாயாவதி, தனக்கு பிறகு கட்சியை கவனிக்க தனது சகோதரர் அனந்த்  குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்தை (28) பகுஜன் சமாஜ் கட்சி யின் ‘வாரிசாக’ சமீபத்தில் அறிவித்தார். 

இந்நிலையில், ஆகாஷ் ஆனந்திற்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு  (2 கமாண்டோக்களுடன், 11 காவலர்  கள்) அளிக்கப்பட உள்ளதாக ஒன்  றிய உள்துறை அமைச்சகம் அறி வித்துள்ளது உத்தரப்பிரதேச அர சியல் களத்தில் கடும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. காரணம் கடந்த  2014-இல் மோடி பிரதமரான பின்பு  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாட் டில் பல்வேறு தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மத்தியப் படை  பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு வந்தது. தனக்கு மட்டுமே இருக்க  வேண்டும் என்ற மனநிலையில் காங்  கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு வழங்கப் பட்டு எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றார் பிரதமர் மோடி. அதே போல முக்கியமான மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே “ஒய்” பிரிவு பாதுகாப்பை  வழங்கி வருகிறது மோடி அரசு. 

இந்நிலையில், திடீரென மாயா வதியின் அரசியல் வாரிசான ஆகாஷ் ஆனந்திற்கு வழங்கப்பட் டுள்ள “ஒய்” பிரிவு பாதுகாப்பு பாஜகவின் அரசியல் ஆதாய பொருளாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. 

பிஎஸ்பியை  இழுக்க முயற்சி?
பிரதமர் மோடிக்கு எதிரானவர் போல மாயாவதி தன்னை வெளிப்  படுத்திக் கொண்டாலும் குடியரசுத்  தலைவர் தேர்தல் முதல் சமீபத்தில்  நிறைவு பெற்ற மாநிலங்களவை தேர்தல் வரை பிஎஸ்பி எம்எல்ஏக் கள் பாஜகவுக்கே வாக்களித்து வரு கின்றனர். பிரதமர் மோடிக்கு எதி ரான பிம்பம் கொண்டவர் போல பேசும் பொழுது நீங்கள் ஏன் எதிர்க்  கட்சிகளின் கூட்டணியில் சேரக்  கூடாது என காங்கிரஸ், சமாஜ்வாதி  உள்ளிட்ட கட்சிகள் “இந்தியா” கூட்  டணியில் சேர அழைப்பு விடுத்தனர்.  ஆனால் மாயாவதி தனித்து போட்டி  என்ற 2 வார்த்தைகளில் நழுவி வரு கிறார். 

இதனால் பாஜகவுடன் பிஎஸ்பி  ரகசியக் கூட்டணி வைத்துள்ளதாக உத்தரப்பிரதேச அரசியலில் விமர்ச னங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆகாஷ் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ள “ஒய்” பிரிவு பாதுகாப்பு, சமீபத்தில் நிறைவுபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிற்கு, பிஎஸ்பி எம்எல்ஏக்கள் வாக்களித்ததற்காக வழங்கப்பட்டுள்ள பரிசா? தேசிய  ஜனநாயக கூட்டணியில் மாயா வதியை இழுக்க மோடி அரசு வகுத்த வியூகமா? என்ற பல்வேறு  சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.