லக்னோ, ஜூலை 31- உத்தரப்பிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் கராரி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவர் அம் மாவட்டத்தின் பாஜகவின் நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் அனந்த் (10) சனிக்கிழமை வீட்டின் அருகே உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து ‘திருடன்-போலீஸ்’ (சோர்-சிபாஹி) விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, ஆனந்த் தனது வீட்டில் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை ‘‘பொம்மை துப்பாக்கி’’ என நினைத்து எடுத்து வந்துள்ளான். அதில் துப்பாக்கிக் குண்டுகள் இருந்த நிலையில், விளையாட்டில் தனது பக்கத்து வீட்டு சிறுவனான வேதாந் தாவை (11) ஆனந்த் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இரத்த வெள்ள தில் சிறுவன் வேதாந்தா சுருண்டு விழுந்துள்ளான். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக் கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.