ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் சமூகத்தின் முக்கிய அமைப் பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா பிரிவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி செவ் வாயன்று காலை மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட் டார். இந்த கொலை சம்பவத்தை கண் டித்து சுகதேவ் சிங் கின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர், ராஜ்புத் அமைப்பினர் ஜெய்ப்பூரில் போராட்டம் நடத்தி வரு கின்றனர். புதனன்று ஜெய்ப்பூரின் பெரும் பாலான இடங்களில் போராட்டம் வன் முறையாக மாறியது. இதனால் ஜெய்ப்பூ ரில் கடந்த 3 நாட்களாக இயல்புநிலை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் கும் பலைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் சிங்கை கொலை செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணை தகவலை ஜெய்ப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே சுக்தேவ் சிங் கோகமேடியை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் கொலை செய்யலாம் என பஞ்சாப் காவல்துறை எச்சரித்து இருந் தது. இந்த எச்சரிக்கையை கருப்பொரு ளாக வைத்து ஜெய்ப்பூர் போலீசார் விரை வில் பஞ்சாப் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.