ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கு மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். பத்ரா தொகுதியில் போட்டியிடும் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரான பல்வான் புனியாவுக்கு ஆதர வாக மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன். மாநிலத்திலேயே பிற கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டங்களைவிட மிகப்பெரும் கூட்டமாக இது அமைந்திருந்தது. அதேபோல, தந்தா ராம்கர், தோடு உள்ளிட்ட தொகு திகளில் மிகப்பெரும் மக்கள் கூட்டம் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் நடந்துள்ளன.
ராஜஸ்தானிலும் இந்தியாவிலும் பாஜகவை தோற்கடிப்பதே இந்தியாவை பாதுகாப்பதற்கான வழி என்பதை மாநில மக்கள் உணர்ந்திருக்கிறார் கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக் கள் மீண்டும் வெல்வது உறுதி.