states

img

ராஜஸ்தானில் தண்ணீர் கேன் போட வந்ததாக கூறி மெகா திருட்டு!

ஜெய்ப்பூர், ஜூன் 14- தண்ணீர் கேன் போட வந்ததாகக் கூறி பலகோடி மதிப்பிலான டீசலை திருடிய கும்பல் வசமாக சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அருகேயுள்ள தாமி கலன் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்துப் பல ஆண்டுகளாக தண்ணீர் கேன் விற்பனை செய்வதாகக் கூறிவிட்டு வீட்டிற்குள் சுரங்கப்பாதை அமைத்துப் பல கோடி மதிப்பிலான டீசலை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டிற்கு அடியில் 25 அடி ஆழத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பைப்லைனில் இருந்து டீசல் திருடியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.