states

img

ராஜஸ்தான் தேர்தலில் சிபிஎம் நடத்திய வலுவான போராட்டம்

ஜெய்ப்பூர், டிச. 4- ராஜஸ்தானில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருமுனைகளில் கடும் போட்டியை எதிர்கொண்ட போதிலும் வாக்குகளை அதிகரித்து தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிறுவியுள்ளது. 

ராஜஸ்தானில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டதில் ஓரிடத்தில் ஒரு லட்சத்துக்கு அதிகமாகவும், 4 வேட்பாளர்கள் 50,000 வாக்குகளுக்கு மேலும் பெற்றுள்ளனர். கடந்த முறை வெற்றி பெற்ற பத்ரா தொகுதியில், இம்முறை இரண்டாமிடம் பிடித்தாலும், 1,01616 ஓட்டுகளைப் பெற முடிந்தது. தோத் தொகுதியில் 72,000 வாக்குகளுக்கு மேல் பெற முடிந்தது. கடந்த முறை தத்ராவில் 81,655 பேரும், தோத் தொகுதியில் 61,089 பேரும் சிபிஎம்-க்கு வாக்களித்தனர். ரெய்சிங்நகர் தொகுதியில் கடந்த முறை 43,264 ஆக இருந்த சிபிஎம் ஓட்டு இம்முறை 61,057ஆக அதிகரித்துள்ளது.

கடந்த முறை சிபிஎம் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. பத்ரா மற்றும் துங்கர்கர். இந்த முறை இரண்டு இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. பத்ரா தொகுதியில் தற்போதைய உறுப்பினர் சிபிஎம்-இன் பல்வான் புனியா வெறும் 1161 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஐந்தாவது இடத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 3669 வாக்குகள் மட்டுமே பெற்றது பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 2018 இல் பத்ராவில் காங்கிரஸ் 37,574 வாக்குகளைப் பெற்றிருந்தது. சிபிஎம்-இன் தோல்விக்கு இது காரணமாக அமைந்துள்ளது. 

இம்முறை 17 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் மொத்தம் 3,82,378 வாக்குகளைப் பெற்றது. 2013இல் 38 இடங்களில் 2,39,002 வாக்குகளும், 2018இல் 28 இடங்களில் போட்டியிட்டு 4,32,001 வாக்குகளும் பெற்றது.