உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட் டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடை பெறும் நிலையில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிலை பிரதிஷ்டை செய்ய உள் ளார்.
இந்நிலையில், குடியரசுத் தலை வர் திரெளபதி முர்முவை சிறப்பு விருந்தினராக அழைத்து ராமர் கோவில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என என சிவசேனா (உத் தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “அயோத்தி ராமர் கோவில் விழா தேசிய பெருமைக்குரிய விஷயம். மேலும் நாட்டின் சுயமரியாதையுடன் தொடர்புடையது. எனவே ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வைத்து நடத்த வேண்டும்” எனக் கூறி யுள்ளார். “இந்தியா” கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத் தவ்) கட்சி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெயரளவுக்கு அழைப்பு
வெள்ளியன்று ராமர் கோவில் அறக்கட்டளை குழுவினர் குடி யரசுத் தலைவர் திரெளபதி முர்மு வை நேரில் சந்தித்து அயோத்தியில் நடைபெறும் ராமர் சிலை பிர திஷ்டை விழாவில் கலந்து கொள்ளு மாறு பெயரளவிற்கு அழைப்பு விடுத்தனர்.