மும்பை,மார்ச் 30- மும்பையில் மின்சார கட்டணத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப் போவ தாக டாடா பவர், அதானி குழுமம் ஆகிய மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் அறி வித்துள்ளன. மும்பையின் தெற்கு பகுதி முழுவ தும் டாடா நிறுவனம் மின் விநியோகம் செய்துவருகிறது. இந்நிறுவனம் பெரும் பாலும் நிலக்கரியை இறக்குமதி செய்தே மின் உற்பத்தி செய்துவருகிறது. மும்பை யின் புறநகரில் மின் விநியோகம் செய்து வரும் அதானி நிறுவனம் உள்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருக்கும் நேரத் தில் மட்டும் இறக்குமதியை நம்பியுள்ளது. எனவே டாடா நிறுவனம் மின்கட்ட ணத்தை உயர்த்தவேண்டிய கட்டாயத் தில் உள்ளது. டாடா நிறுவனம் ஒரு யூனிட்டிற்கு ரூ.1.10 வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதானி நிறுவனமும் யூனிட்டிற்கு 25 பைசா வரை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.இதன் படி மகாராஷ்டிரா மின்வாரியம் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மின்கட்டண உயர்வை அமல்படுத்த தீர்மானித்துள் ளது.