states

பெண் காவலர்களின் பணி நேரம் குறைப்பு

மும்பை,ஜன.29- மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கான பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக் குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சஞ்சய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களின்  பணி நேரம் 12 மணி நேரமாக இருக்கும் நிலையில், தற்போது பெண் காவ லர்களுக்கு சிறந்த  வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, சோதனை அடிப்படையில் முதற் கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப் புறங்களில் செயல்படுத்தப்படுகிறது. அவசர காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் அவர்களுக்கான பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.