states

img

மும்பையில் ராகுல் யாத்திரை நிறைவு விழா

மும்பை, மார்ச் 17 - காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியு மான ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியா குமரி முதல் காஷ்மீர் வரை (தெற்கில் துவங்கி வடக்கு  நோக்கி) 4000 கி.மீ. தொலை வில் நடைபயணம் மேற்கொண்டு “இந்திய ஒற்றுமை யாத்திரை” மேற்கொண்டார்.

பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நீதி கோரும் வகையில் “இந்திய ஒற்று மைக்கான நீதி யாத்திரை” என்ற பெயரில் இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி கடந்த ஜனவரி 14 அன்று மணிப்பூர் மாநிலத்தில் துவங்கினார்.  

இந்த யாத்திரை அருணாச்சலப்பிர தேசம், அசாம், மேற்குவங்கம், பீகார், சத்தீஸ் கர், ஜார்க்கண்ட், ஒடிஷா, உத்தரப்பிரதசம், மத்தியப்பிரதேசம், குஜராத் வழியாக கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தை அடைந்தது.  மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த ராகுல் யாத்திரை 2 நாட் களுக்கு முன் மும்பையை அடைந்த நிலை யில், ஞாயிறன்று சிவாஜி பார்க் மைதா னத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. நிறைவு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.