மும்பை, ஜன.4- பெண் பத்திரிகையாளா் உள்ளிட்ட இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்கள் ‘புல்லிபாய்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவா்களை ஏலம் விடுவதாக அறிவித்த நிலையில் அந்த செயலி திங்களன்று (ஜன.3) முடக்கப்பட்டது. இச்செயலி குறித்து தில்லியிலும் உத்தரப் பிரதேசத்திலும் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். இதில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல் துறைக்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், பெண்களைத் தவறாகச் சித்தரித்த இந்த வழக்கில் தொடர்புடையதாக, 21 வயது பொறியியல் மாணவர் விஷால் குமாரை மும்பை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். விஷால்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்படுகளில்), 509 (ஒரு பெண்ணை அவமதித்தல்), 354 (அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் எந்தவொரு பெண்ணையும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷால்குமார் புல்லிபாய் செயலியின் உள்ளடக்கத்தை உருவாக்கவில்லை, ஆனால் ஆன்லைனில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து மற்றொரு நபரை விசாரணைக்கு அழைத்துவரும் பணியில் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.