states

img

ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதத்தில் கவிழும்!

மும்பை, ஜூலை 4 - மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ‘மகா  விகாஸ் அகாதி’ அரசைக் கவிழ்த்து  விட்டு, பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துள்ளது. பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு, பட்னாவிஸ் தற்போது துணை முதல்வராகியுள்ளார். இந்த கூட்டணி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை யும் நிரூபித்துள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் பேசியுள்ளார். அப்போது ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதங்கள் கூட பதவியில் தாக்குப் பிடிக்காது என்று கணித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இப்போதே  சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:

“மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசும் அடுத்த 6  மாதங்களில் கவிழும் வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் இடைத் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். இப்போது உள்ள அரசு அமைப்பு மீது அதிருப்தி எம்எல்ஏ-க்களில் பலருக்கும் உடன்பாடு இல்லை.  அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிக்கப்பட்ட உடன், சலசலப்பு உருவாகும். அதை அவர்களால் நிர்வகிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். இதனால் புதிதாக உருவான அரசும் கவிழும் சூழல் உருவாகும். இந்த சோதனை முயற்சி கண்டிப்பாகத் தோல்வி அடையும். இதனால் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ-க்கள் பலரும் மீண்டும் தாக்கரே பக்கம் திரும்புவார்கள்.  நம் கையில் வெறும் 6 மாதங்கள் இருக்கும் என நினைக்கிறேன். எனவே, என்சிபி உறுப்பினர்கள் தங் கள் தொகுதிகளில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களில் என்ன வேண்டு மானாலும் நடக்கும் என்பதால் நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் நிலைமையை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.”  இவ்வாறு சரத் பவார் கணித்துள் ளார்.

கோஷ்யாரி போன்ற ஆளுநரை பார்த்ததில்லை

மேலும் அவர் கூறுகையில், “1967ம் ஆண்டு முதல் பதவியேற்பு நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். 1972 முதல் 1990 வரை பதவியேற்று இருக்கிறேன். அப்போது எல்லாம் ஆளுநர் முதலமைச்சராக பொறுப் பேற்பவருக்கு பூங்கொத்து மட்டுமே வழங்குவார். ஆனால் இப்போது பூங்கொத்து கொடுப்பதற்கு முன், இனிப்புகளும் வழங்குகிறார். இது போன்று நான் எங்கும் பார்த்த தில்லை. ஆளுநரின் நடவடிக்கை யில் சில மாற்றங்கள் இருப்பதாக தெரிகிறது” என்றார்.  “2019ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தல் முடிவுக்குப் பின், மகா விகாஸ் அகாதி தலைவர்களின் பதவியேற்பு விழா நடந்தது. நானும் அந்த விழாவில் இருந்தேன். சில  அமைச்சர்கள் அவர்களின் சிந்தாந்த அடிப்படையிலான சின்னங்கள் அல்லது நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பதவியேற்றனர். அதற்கு ஆளுநர் கோஷ்யாரி எதிர்ப்பு தெரி வித்தார். உறுதிமொழியை உரிய விதி முறைகளின்படி எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற போது, ​​மறைந்த பால் தாக்கரே மற்றும் மறைந்த ஆனந்த் திகே ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார். ஆனால் ஆளுநர் கோஷ்யாரி இந்த நடைமுறையை எதிர்க்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளின் பின்னணிகளைக் கொண்ட பிரதிநிதி கள் பதவியேற்கும் போது, ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை” என்றும் சரத் பவார் கூறினார்.  மாநில அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் ஆளுநரைக் கட்டுப்படுத்தும். முன்னதாக 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக நிய மிக்க முந்தைய மகா விகாஸ் அகாதி  அரசு பரிந்துரை செய்தது. ஆனால்,  அதற்கு அவர் ஒப்புதல் கொடுக்க வில்லை. தற்போதைய புதிய அர சுக்கு தேவையான முடிவுகளை விரை வாக எடுப்பார் என்று கூறப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி (செய்தி : 6)