மும்பை, ஜூலை 4- அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியது தொடர்பான வழக்கு விசார ணையில் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத் தலைவர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி செவ்வாய்க்கிழமை அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். உலகப் பணக்காரர்களில் ஒரு வரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, ரிலை யன்ஸ் ஏ.டி.ஏ. குழுமத்தின் தலைவராக உள்ளார். இவரிடம், யெஸ் வங்கித் தலைவர் ராணா கபூர் மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சுவிஸ் வங்கிக் கணக்கில் ரூ.814 கோடி வைத்துள்ளது, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது குறித்தும் வரு மான வரித்துறை அவரிடம் விசாரித்த தாக கூறப்படுகிறது. ஜெர்சி, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சைப்ரஸில் அமைந்துள்ள கடல்சார் நிறுவனங்களுடன் அனில் அம்பானிக்கு உள்ள தொடர்புகளை யும் அமலாக்கத்துறை ஆய்வுக்குட் படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அந்நியச் செலா வணி மேலாண்மை சட்டத்தின் கீழ் (பெமா) பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக திங்க ளன்று (ஜூலை 3) அனில் அம்பானி (64) அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில் அனில் அம்பானி யின் மனைவி டினா அம்பானி மும்பை யில் உள்ள அமலாக்க இயக்குநர கத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரா னார். இந்தக் குற்றச்சாட்டுகள் பண்டோரா பேப்பர்ஸ் வழக்குடன் தொடர்புடையவை. அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர். விசாரணை நடந்தது என்ற போதிலும், இவையனைத்தும் கண் துடைப்புக்காகவே என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.