எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந் தியா’ கூட்டணியின் முதல் கூட்டம், கடந்த ஜூன் 23 அன்று பீகார் தலை நகர் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை 17, 18 தேதிகளில் பெங்களூருவி லும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது.
முன்னதாக, பெங்களூருவில் ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் நடை பெற்ற அதேநாளில் (ஜூலை 18), பாஜக, தனது தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியின் கூட்டத்தை தில்லியில் கூட்டியது. ‘இந்தியா’ கூட்டணியின் கூட் டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்ட நிலை யில், அதற்குப் போட்டியாக பாஜக 38 கட்சிகளை வைத்து கூட்டம் போட்டது.
தற்போது, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடை பெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறும் செப். 1 அன்று மகா ராஷ்டிர பாஜக கூட்டணியின் கூட்டமும், அதே மும்பையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.