உத்தவ் தாக்கரே ஆவேசம்
மும்பை, பிப். 21 - ஆளும் பாஜக, தனது சொந்த விருப்பங்களுக்காக தேர்தல் ஆணை யம் போன்ற ஜனநாயக அமைப்பு களை அழிப்பதாகவும், பாஜக-விடம் சரணடைந்து விட்ட இந்திய தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “தேர்தல் ஆணையத்தால் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒரு பிரி வினருக்கு நேரடியாக வழங்கப்பட்ட ஒரு நிகழ்வு இதற்கு முன்பு நடந்தது இல்லை. இந்திய தேர்தல் ஆணை யத்தின் முடிவு தவறானது. இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் மட்டுமே எங்களின் முழு நம்பிக்கை. இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பாக தேர்தல் ஆணை யம் எதற்காக அவசரப்பட்டு முடி வெடுத்தது என்பது தெரியவில்லை. சொந்த விருப்பங்களுக்காக பாஜக, நாடு முழுவதும் ஜனநா யகத்தை அழித்து வருகிறது. இது போன்ற செயல்கள் தடுக்கப்படாமல் போனால், 2024-ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. 2024 மக்களவை தேர்த லில் அவர்கள் வெற்றி பெற்றால் சர்வாதி காரத்தின் அப்பட்டமான நடனம் தொடங்கும். கட்சியின் பெயரையும் சின்னத்தை யும் பறித்தது சிவசேனாவை அழிக்கும் பாஜக-வின் சதி. தில்லியில் உள்ளவர்களுக்கு சிவசேனாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி இல்லை. சிவசேனா கட்சி, அதன் பெயர் மற்றும் வில் அம்பு சின்னம் என்னிடம் இருந்து திருடப்பட்டிருக்க லாம். ஆனால், ராமரின் தனுஷை (வில்) ராவணனால் பிடிக்க முடியாது. தாக்கரே என்ற பெயரை யாராலும் திருட முடியாது. பாலாசாகேப் தாக்கரேவின் குடும்பத்தில் பிறந்ததை நான் அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன். மம்தா பானர்ஜி, சரத் பவார், நிதிஷ் குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ள னர்.
ஒரு கட்சியின் நிதி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமை கிடையாது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப் படுவதை உறுதி செய்வதே தேர்தல் ஆணையத்தின் பணியாகும். இதை மீறி தலையிட்டால், ஆணையத்தின் மீது குற்ற வழக்கு தொடரப்படும். எனது கட்சியின் சொத்துக்களை ஏக்நாத் ஷிண்டே தரப்பு கையகப் படுத்தி வருகிறது. பாலாசாகேப் தாக்கரேவின் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு, அவரவர்களின் தந்தையின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வாக்குகளை பெற வேண்டும். ஜனநாயகமற்ற முறையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியை யும், சின்னத்தையும் வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம் கலைக்கப் பட வேண்டும். தேர்தல் ஆணையர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மராத்தியர்களின் எதிரி அமித்ஷா
சிவசேனா அபகரிக்கப்பட்ட விஷயத்தில், சாம்னா பத்திரிகையும் பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளது. “தேர்தல் ஆணையம் சிவசேனாவின் முழுப் பிரச்சனையை யும் சொத்துத் தகராறு போலக் கருதி, தாக்கரேவால் வளர்க்கப்பட்ட சிவசேனாவை தில்லியின் அடிவருடிகளிடம் (ஷிண்டே தரப்பிடம்) ஒப்படைத்து விட்டது. அமித்ஷா ஆதர வின் காரணமாகவே சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதையும் இனி மறைக்க வேண்டியதில்லை. இந்த நபர் மகாராஷ்டிரா மற்றும் மராத்திய மக்களின் எதிரி. அமித்ஷாவுடன் கூட்டணி வைப்பவர்கள் மகாராஷ்டிராவின் எதிரிகளாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று சாம்னா குறிப்பிட்டுள்ளது.