states

‘ஜெய் ஸ்ரீராம்’ என கூச்சலிட்டபடி முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்

மும்பை, ஆக. 16 - இந்து பெண்ணுடன் நடந்து சென்ற  இஸ்லாமிய இளைஞரை, ‘ஜெய் ஸ்ரீராம்’  என்று கூறியபடியே, ஒரு கும்பல்  கொடூரமாக தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் வந்துகொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை சுமார் 30 பேர் கொண்ட ஒரு கும்பல் சுற்றி வளைத்து, இஸ்லாமியரான அந்த  இளைஞர் இந்து பெண் ஒருவருடன் வந்ததாக கூறி அவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. இளைஞரின் தலை முடியை பிடித்து சிலர் இழுத்து செல்ல மற்றவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு அவரைத் தாக்கு கிறார்கள். வலியில் அந்த இளைஞர் கதறி துடிக்கிறார். அவருடன் வந்த பெண், அந்த இளைஞரை விட்டு விடு மாறு மன்றாடுவது கேட்கிறது. ஆனாலும், விடாமல் அந்த  இளைஞரைத் தாக்கி வீடியோ எடுத்தது மட்டுமின்றி ஜெய்ஸ்ரீராம் என்றும் கூச்சல்களை எழுப்பியுள்ளது.

அந்த இளைஞரை ரயில் நிலையத்துக்கு வெளியே இழுத்து சென்றும் அந்த கும்பல் கொடூரமாக தாக்குதல்  நடத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்த மற்ற பய ணிகள் இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் தடுக்க முன்வரவில்லை. ரயில்வே பாதுகாப்பு போலீசாரும் ஒருவரும் அங்கே இல்லை. தங்களின் தாக்குதல் சம்பவம் குறித்து, வீடியோவில் பேசி இருக்கும் வெறிக்கும்பலைச் சேர்ந்த ஒருவர், “உடன் வந்த இந்து பெண்ணுக்கு வெறும் 16 வயதே  ஆகிறது. பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஒரு மைனர் பெண்ணை காப்பாற்றி இருக்கிறோம்.” என்று கூறி யுள்ளார். அனைத்து இந்தியர்களும் என் சகோதர,  சகோதரிகள் என்று நாடே உறுதிமொழி எடுத்துக்கொண்டி ருந்த சுதந்திரத் தினத்தன்று, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூச்சலிட்டபடி, ஒரு கும்பல், முஸ்லிம் இளைஞரைத் தாக்கும் இந்த வீடியோவை ‘ப்ரீ பிரஸ் ஜேர்னல்’ ஊடகம் வெளியிட்டு உள்ளது. உண்மையில் இந்த சம்பவம் ஜூலை 21 அல்லது 22 தேதிகளில் நடந்ததாக கூறப்படு கிறது. எனினும், பாந்த்ரா நகர் ரயில்நிலையத்தை  உள்ளடக்கிய நிர்மல் நகர் காவல்நிலைய போலீசார் வழக்கோ, விசாரணையோ,  கைது நடவடிக்கையோ எதுவும் மேற்கொள்ளவில்லை என்று அசாதுதீன் ஒவை சியின் மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் கூறியுள் ளார். தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.