மணிப்பூரில் தமிழர்கள் ஆயி ரக்கணக்கில் வசிக்கும் மியான் மர் எல்லை நகரமான மோரே வில் பாதுகாப்புப் படையினருக்கும் குக்கி ஆயுத குழுவினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் இந்த சண்டை நீடித்தது. இந்த மோதலில் சமோர் ஜித் என்ற போலீஸ் கமாண்டோ துப் பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற் றொரு போலீஸ் அதிகாரி படுகாயங்க ளுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். மோரே நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு போலீஸ் அதி காரி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையதாக சந் தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாதுகாப்புப் படையினர் மீது குக்கி ஆயுதக் குழுவினர் தாக்கு தல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் போலீஸ் கமாண்டோ ஒரு வர் பலியானார். இதனால் மோரே நகரில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. அங்கு ஊரடங்கு உத்தரவும் அமல் படுத்தப்பட்டிருந்தது.