இம்பால்,செப்.14- பாஜகவின் இழிஅரசிய லால் மணிப்பூர் மாநிலம் கடந்த 5 மாதங்களாக பற்றி எரிந்து வருகிறது. வன்முறையில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கி வரும் நிலையில், பல ஆயிரம் மக்கள் காயமடைந்தும், வீடுகளை இழந்தும் உயிருக்கு பயந்தும் வேறு இடத் திற்கு இடம்பெயர்ந்து இயல்புநிலை யை இழந்துள்ளனர். ஆனால் மணிப்பூரை ஆளும் மாநில பாஜக அரசு மாநிலத்தில் வன்முறை குறைந்து விட்டதாகவும், மக்கள் இயல்புநிலை யுடன் இருப்பதாக நாடகமாடி வரு கிறது. கடந்த ஒரே வாரத்தில் காங்போக்பி, பல்லேல ஆகிய பகுதிகளில் அரங்கேறிய வன்முறையில் துப்பாக்கிச் சூட்டிற்கு 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் புதனன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாது காப்பு பணியில் இருந்த மாநில துணை காவல் ஆய்வாளர் ஹவோஹிப் (40) உயிரிழந்தார். மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசுக்கே பாது காப்பு இல்லை என்ற நிலையில், மக்கள் நிலைமையை மேற்கொண்டு எடுத்துக் கூற வேண்டுமா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஸ்னைப்பர் மூலம் தாக்குதலா? துணை காவல் ஆய்வாளர் ஹவோ ஹிப் ஸ்னைப்பர் என அழைக்கப்படும் குறிபார்த்து சுடும் துப்பாக்கி வகைக்கு இறையாகியுள்ளார் என தகவல் வெளி யாகியுள்ளது. கடந்த மாதம் துணை ராணுவப்படையின் ஆயுதக்களஞ்சி யத்தை வன்முறையாளர்கள் தங்க ளது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஆயுதங்கள் அனைத்தையும் கொள் ளையடித்த நிலையில், அந்த ஆயு தங்கள் மூலம் துணை காவல் ஆய்வா ளர் ஹவோஹிப் கொல்லப்பட்டிருக்க லாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.