states

img

மணிப்பூரில் துயருற்ற மக்களுக்கு மாதர் சங்கத் தலைவர்கள் ஆறுதல், நிவாரணம்

வன்முறையால் பாதிக்கப் பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பிரதிநிதிகள் குழு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி, பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு முதல் நாளில் மணிப்பூரின் காங்போக் நகரில், வன்முறையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீடுகளை இழந்து துயரமுற்று இருக்கும் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினர். 

படம் : 1 - வன்முறையின் பொழுது 7 வயது மகன், மனைவி, நண்பர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட துக்கத்தில் இருக்கும் ஜோசுவாவிற்கு ஆறுதல் கூறும் மாதர் சங்க பிரதிநிதிகள். படம் : 2 - வன்முறையில் இரு இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் தாய் - தந்தையை நேரில் சந்தித்த மாதர் சங்க பிரதிநிதிகள் ஆறுதல் கூறி நிவாரணம் அளித்தனர். பலியான இளம்பெண்களின் தந்தை பார்வை மாற்றுத் திறனாளி ஆவார். பலியான அந்த இரண்டு பெண்கள்தான் கார் கழுவும் தொழில் செய்து குடும்பத்தை கவனித்து வந்தனர். இந்நிலையில், அவர்களை இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் அக்குடும்பம் தவித்து வருகிறது.