“இஸ்ரேல் – ஈரான் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது சரியல்ல”
இஸ்ரேல் – ஈரான் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது சரியல்ல என்று காங்கிரஸ் மூத்த தலை வர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளித ழில் அவர் எழுதியுள்ள கட்டுரை யில், “இஸ்ரேல் – ஈரான் விவகாரத்தில் இந்தியா காக்கும் மவுனம், ராஜதந்திரத் தவறாகும். இந்தியாவின் தார்மீக மற்றும் யுத்தி சார்ந்த பாரம்பரியங்களிலிருந்து விலகிச் செல்வதாகும். இஸ்ரேலின் தாக்குதல் சட்டவிரோதமானதாக மற்றும் இறையாண்மை மீறிய செய லாக உள்ளது. காசாவில் நிகழ்த்தப் படும் கொடூரமான தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஆழமான நாகரிகத் தொடர்பு உள்ளது. அதனால் இந்தியா தெளி வாகப் பேச வேண்டும்; பொறுப்புடன் செயல்பட வேண்டும். போர் பதற்றத் தைத் தணிக்க அனைத்து ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.