மணிப்பூரில் கல்வி சுற்றுலாவுக்கு சென்ற பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில், 36 பள்ளி மாணவர்களை, கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற 2 பேருந்துகள், பிஷ்ணுபூர் - கௌபம் சாலையில் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறித்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 20 மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.