ரீமெல் புயலுக்குப் பிறகு இடைவிடாது பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து மணிப்பூரில் 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 24,265 வரையிலான வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், 18 ஆயிரம் பேர் வெள்ள அபாயப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 401 ஹெக்டேர் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 18 இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்துள்ளன என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.