இம்பால், ஜன. 02- கடந்த 35 நாட்களாக வன்முறை சம்பவங்கள் ஓரளவு குறைந்து இருந்தது. இதனால் மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டதாக அம்மாநில பாஜக அரசு கூறிவந்த நிலையில், புத்தாண்டு தினமான திங்களன்று மீண்டும் வன்முறை வெடித்தது.
தவுபால் மாவட்டம் லிலோங் சின்ஜாவ் பகுதியில் ஆயுதங்களுடன் வந்த மர்மக் கும்பல் திடீரென அங்கிருந்த உள்ளூர் மக்களை நோக்கி துப்பாக்கி யால் சரமாரியாக சுட்டது. இந்த தாக்கு தலால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆயுதக் கும்பல்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த இருதரப்பு மோத லில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஐந்து பேர் படுகாயத்துடன் மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.
இந்த வன்முறை சம்பவத்தால் தவு பால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு காக்கிங், பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங் களுக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், துணை ராணுவப் படையினருடன், உள்ளூர் போலீசாரும் இணைந்து பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.