ராய்ச்சூர், ஜூலை 21 - மணிப்பூர் பாலியல் வன்கொடுமை குறித்த சம்பவத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு திசைத்திருப்பும் வித மாக உள்ளது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் விமர்சித்துள்ளார். மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய பிரதமர் மோடி, ராஜஸ் தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களையும் இழுத்துக் கொண்டார். “இத்த கைய சம்பவம் நடப்பது, அது சத்தீஸ்கர், ராஜஸ்தான், மணிப்பூர் என எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்குத்தான், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பதிலடி கொடுத்துள்ளார். மணிப்பூர் சம்ப வத்தின் மீதான கவனத்தைத் திசை திருப்பவே பிரதமர் நரேந்திர மோதி சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங் களின் பெயர்களைச் சேர்த்துக் குறிப்பி டுவதாக அவர் விமர்சித்துள்ளார். “மணிப்பூர் சம்பவம் வேறு மாதிரி யானது. அதுகுறித்துப் பேசப் பட்டிருக்க வேண்டும். ஆனால், சத்தீஸ்கரையும் ராஜஸ்தானையும் இதோடு இணைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? சத்தீஸ்கர் மாநிலத்தை அவதூறு செய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி துரதிர்ஷ்டவசமானது. முதலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிறகு மணிப்பூர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் முதன்முறை யாக ஊடகங்கள் முன்பு வந்த பிரதமர் மோடி பொய் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். பிரதமரே இந்தப் பேச்சுகளை நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்” என்று பூபேஷ் பாகேல் கடுமையாக சாடியுள்ளார்.