states

img

அம்பலமானது ரயில்வேயின் விழாக்கால கட்டணக் கொள்ளை

பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் ரயில்வே நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மறைமுகமாக டிக்கெட் விலையை உயர்த்துவதாக சமீபகாலமாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், வடமாநிலங்களின் முக்கிய பண்டிகையான “சாத் பூஜை” என்ற பண்டிகை கொண்டாட்டத்தின் பொழுது இந்த ரயில்வே நிர்வாகத்தின் மறைமுக கட்டணக் கொள்ளை தற்போது ஆதாரத்துடன் வெளியே கசிந்துள்ளது.பாட்னா,

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யிலிருந்து பீகார் மாநிலம் பாட்னா செல்ல சாதாரண நாட்களில் முதல் வகுப்பு ஏசி பிரிவு கட்டணம் ரூ. 4425 ஆகவும், இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ. 2600 ஆகவும், மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.1795 ஆகவும், சாதாரண படுக்கை வகுப்பு கட்டணம் ரூ.670 என்ற நிலையில் இருக்கும். ஆனால் பண்டிகை நாட்களில் 3 மடங்கு கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அசிமா பட் என்பவர் சாத் பண் டிகை கொண் டாட்டத்திற்காக மகா ராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தனது சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவிற்குச் செல்ல சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில்  ஆன்லைன் முன்பதிவு செய்த  பொழுது முன்பதிவு தேர்வு பட்டிய லில் முதல் வகுப்பு ஏசி டிக்கெட் ரூ.10  ஆயிரத்துக்கு மேல் என்ற நிலை யிலும், இரண்டாம் வகுப்பு ஏசி  டிக்கெட் ரூ.9355 ஆகவும், மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட் ரூ. 6655 ஆக வும், சாதாரண படுக்கை வகுப்  பிற்கு ரூ. 2625 என கட்டணம் நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. இதனை அசிமா பட் ஸ்கிரீன்ஷாட் எடுத்து  ஸ்னாப்சாட் என்ற சமூகவலைத்  தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விமான கட்டணத்தை விட அதிகமாக 

மும்பையிலிருந்து பாட்னா செல்ல இடைநில்லா விமான கட்ட ணம் ரூ.8 ஆயிரத்துக்குள் இருக்கும் நிலையில், ரயில் கட்டணம் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் இருப்பது  கடும் அதிர்ச்சி அலையை ஏற் படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சப்ராங் இந்தியா உள்ளிட்ட ஒருசில ஊடகங்களில் செய்தியாக வெளி யான நிலையில், சாத் பண்டிகை  கொண்டாட்டத்தின் பொழுது  ரயில்வேயின் கட்டணக் கொள்ளை யால் பாதிக்கப்பட்ட பயணிகள் பலர் ரயில்வே டிக்கெட்டை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு புகார் தெரிவித்து வருகின்றனர். சாத் பூஜை பண்டிகை நிறைவு பெற்ற பிறகு ரயில் கட்டணம் வழக்கமான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பயணிகளை ஏமாற்றிய ரயில்வே நிர்வாகம்

சாத் பூஜைக்காக 42 சிறப்பு ரயில்  கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் பெருமையாக அறி வித்தது. 42 ரயில்கள் இயக்கப் பட்டதா என்பது பற்றி முழுமை யான தகவல் இல்லை. மேலும்  குறைவான ரயில்கள் இயக்கப்பட்ட தால் வழக்கமாக செல்லும் ரயில்  கள் பயணிகள் கூட்டம் அலைமோதி யது. கழிவறை அருகில் பயணிகள் பய ணம் செய்துள்ளனர். குஜராத் மாநி லம் சூரத் பகுதியில் சென்ற ரயில்  ஒன்றில் அளவுக்கு அதிகமான கிடைத்தால் ரயில் பெட்டியில் மூச்சு  விட முடியாமல் 4-க்கும் மேற்பட்ட  பயணிகள் மயங்கினர். அவர்  களுக்கு சூரத் ரயில் நிலையத்தில்  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட் டது.

ரயில்வே நிர்வாகத்தின் இந்த  அடாவடியான கட்டணக் கொள்  ளைக்கு எதிராக சமூகவலைத் தளங்களில் நெட்டிசன்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.