நாட்டில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை திடீ ரென அதிகரித்து வரும் சூழ் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத் தவும், உள்நாட்டில் வெங்காய தேவை யை பூர்த்தி செய்வதா கவும் கூறி, 2024 மார்ச் வரை வெங்காயஏற்று மதிக்கு தடை விதித்து வெள்ளியன்று ஒன் றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் வெங்காய ஏற்றுமதியின் தடை உத்தர விற்கு எதிராக, மகாராஷ்டிரா மாநி லம் நாசிக் மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உம் ரானே, சந்த்வாட் ஆகிய இடங்களிலும், சின்னர் - ஷீரடி நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் மும்பை - நாசிக் இடையே போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வெங்காய வியாபாரிகளும் கொள்முதல் பணியை நிறுத்தினர். நாட்டின் மிகப் பெரிய வெங்காய சந்தையான லாசல் கான் வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டி (ஏபிஎம்சி) வெங்காய வணிகர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறி வித்துள்ள நிலையில், நாட்டில் வெங்கா யம் சார்ந்த வணிகம் கடுமையாக பாதிக் கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.